Pages

Friday 27 September 2013

செக்கிழுத்த செம்மல் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளை

செக்கிழுத்த செம்மல் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளை

மாவீரன் பகத் பற்றிய ஒரு வாழ்கை வரலாற்று சிறு குறிப்பு



செப்டம்பர் மாதம் 28 ஆம் நாள் 1907 ஆண்டு, பஞ்சாபில் உள்ள லாயல் பூர் என்ற கிராமத்தில் சர்தார் கிஷன் சிங்க் மற்றும் வித்தியாவதிக்கும் பிறந்தார். அவர் குடும்பமே விடுதலைப்போராட்ட வீரர்களை கொண்டதால் இளம் வயதிலே நாட்டுப்பற்று மிக்கவராக வளர்ந்தார்.

சிறு வயதிலேயே ஜாலியன் வாலாபாக் படுகொலையை கேள்விப்பட்டு அங்கு சென்று இரத்தம் படிந்த மண்ணை ஒரு புட்டியில் அடைத்து எடுத்து வந்து கடைசிவரை தன்னுடன் வைந்திருந்த கொள்கை பற்றாளர்.

அவரது நண்பர்கள் சுக்தெவ், ராஜ்குரு, ஆகியோருடன் சேர்ந்து சந்திர சேகர்ஆசாத்தின் உதவியுடன் ” Hindustan Socialist Republican Army (HSRA)” என்ற அமைப்பை உருவாக்கி சுதந்திரப்போரில் ஈடுபட்டார். சிறு வயதிலேயெ கோதுமை வயலில் துப்பாக்கி விளைய வைத்து வெள்ளையர்களை வேட்டையாட வேண்டும் எனக்கனவு கண்டவர்.

அவர் புரிந்த சாகசங்கள் எண்ணற்றவை இறுதியாக செண்ட்ரல் அசெம்பிளி ஹாலில் வெடி குண்டு மற்றும் துண்டு பிரசுரம் போட்டு இன்குலாப் ஜிந்தாபாத் என்று முழக்கம் இட்டு தானே சரணடைந்து பின்னர் நடைப்பெற்ற லாகூர் கொலைவழக்கு விசாரணையில் தூக்கு தண்டனை அவருக்கும் அவர் நண்பர்களுக்கும் விதிக்கப்பட்டது . அப்போது விடுதலைப்போர் என்பதும் ஒரு போர் தான் எனவே எங்களை போர்க்கைதிகளாக நடத்தி தூக்கில் போடாமல் துப்பாக்கியால் சுட்டுக்கொள்ள வேண்டும் என மரணத்தையு விரும்பி வரவேற்ற வீரன்!

தூக்கு தண்டனையை நிறுத்த சொல்லி காந்தியிடம் பலரும் முறையிட்டனர், அப்பொழுது இர்வின் பிரபுவிடம் ஒரு ஒப்பந்தம் இட காந்தி இருந்தார், பகத் சிங்க் தூக்கை நிறுத்தினால் தான் ஒப்பந்தம் போடுவேன் என சொன்னால் வெள்ளையர்கள் கேட்பார்கள் என நேரு முதலானோர் எடுத்து சொல்லியும் காந்தி வன்முறை வழியில் செயல் படுபவர்களுக்கு ஆதரவாக செயல் பட மாட்டேன் என வேதாந்தம் பேசி மறுத்து விட்டார். கடைசியில் மார்ச் 23, 1931 இல் பகத் சிங்க் அவர் நண்பர்கள் சுக்தேவ், ராஜ்குரு ஆகியோர் தூக்கில் இடப்பட்டனர். அதற்கு ஒரு நாள் முன்னதாக காந்தியும் ஒப்பந்தம் செய்து கொண்டார். காந்தியின் தீவிர சீடர் ஆன நேருவே மனம் வெறுத்து , இன்னும் ஒரு நாள் கழித்தி கை எழுத்து போட்டிருந்தால் அதற்கு பகத் சிங்கின் ரத்தம் கிடைத்து இருக்கும் என சொன்னார்.

ஒரு சே கு வேரா போல இந்தியாவில் இளைஞர்களை வசிகரிக்கும் திறன் கொண்ட மாவீரன் பகத் சிங். அவருக்கு இந்தியா என்றென்றும் கடமைப்பட்டுள்ளது.

வீரன் மருதநாயகம் பிள்ளை


இராமநாதபுரம் பனையூர்ரில் வெள்ளாளர்[சைவ வெள்ளாளர்] இனத்தில் பிறந்தார் இவர் மாபெரும் வீரர் சாகும் தருவாயில் கூட 100 பேர் கொண்று பின் அவர் நண்பரால் பிடிபட்டார் அவர் 1764 ம் ஆண்டு அக்கோடம்பர் 15 ல் தூக்கிலிட்டனர் இவரை முன்று முறை தூக்கிலிட்டும் இறக்கவில்லை
அவர் தலை கை கால் களை வெட்டி நெல்லை தஞ்சை தேனி பல ஊர்களுக்கு அணுப்பினர் பின் மிதமுள்ள உடம்பை மதுரை அடக்கம் செய்தனர் அவர்க்கு ஆங்கிலையர் எதிர்த்த முதல் சுதந்திர போரட்டவீரர்
முதல் தூக்குமேடை எறிய மாவீரன்
ஆவார்
வாழ்ந்த காலம்[1725-1764 அக்டோம்பர் 15 ]
அவர் மரணம் கூட வெள்ளாளர் வெல்லமுடியாது
சத்திரியர் வம்சம்
வெள்ளாளர் இனம் இவர் வம்சம் நாம் வீரம் உள்ளது எழுவோம்
ஆழ்வோம்

வெள்ளாளர் வீரன்

Tuesday 17 September 2013

தமிழ் ஆபிரஹாம் லிங்கன் கதை - true story of Abraham Lincoln- Tamil










ஆபிரஹாம் லிங்கன்


முதன் முதலாகத் தேர்தலை சந்தித்து, தோல்வியடைந்த நேரத்தில்

, பிரார்த்தனைக் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டார் ஆபிரஹாம் லிங்கன்.

கூட்டம் முடிந்ததும், “உங்களில் சொர்க்கத்துக்குச் செல்ல விரும்புவர்கள்

மட்டும் கையை உயர்த்துங்கள்” என்றார் பாதிரியார்.
எல்லோரும் கையைத் தூக்க, ஆபிரஹாம் லிங்கன் மட்டும் பேசாமல் நின்றார்.

“ஆபிரஹாம்! நீ எங்கே போவதாக உத்தேசம்?” என பாதிரியார் கேட்க,

தோல்வி அடைந்திருந்த அந்த

மன நிலையிலும், “நான் செனட் உறுப்பினராகப் போகிறேன்” என்று உறுதியான

குரலில் சொன்னார் அபிரஹாம்.

“நீ எதுவாக மாற விரும்புகிறாயோ, அதுவாக மாறுவாய்” என புன்னகையுடன்

ஆசி வழங்கினார் பாதிரியார்.

1809ம் வருடம் அமெரிக்காவின் சின்னஞ்சிறு கிராமத்தில் பிறந்த லிங்கனை,

“தோல்விகளின் செல்லக் குழந்தை” என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு தொடர்

தோல்விகள் அவரைத் துரத்திக் கொண்டே இருந்தன. பிறந்த சில வருடங்களிலேயே

தாயை இழந்தார்.

ஒரு கடையில் எடுபிடி வேலை பார்த்துக் கொண்டே இரவு நேரங்களில்

மட்டும் பள்ளிப் பாடத்தை ஆர்வத்துடன் படித்தார். இளைஞனாகி, பக்கத்து நகருக்குப்

போனபோது, அங்கே அடிமைகளை வியாபாரம் செய்யும் மனிதச் சந்தையைக் கண்டு

அதிர்ச்சி அடைந்தார். கறுப்பர்களின் அடிமை வாழ்க்கையைப் பற்றி அவர் கேள்விப்பட்டு

இருந்தாலும் காய்கறி போல மனிதர்கள் விற்கப்படுவதை நேரில் கண்டதும் ரத்தம் சூடேற,

லிங்கனுக்கு ஒரு புது லட்சியம் பிறந்தது. ஆட்சிப் பொறுப்புக்கு வந்தால்

தான் இந்த அவலத்தை அகற்ற முடியும் என்று தெரிந்தும்,

அவசரமாக தனது 22வது வயதில் ஒரு நகராட்சி தேர்தல் வேட்பாளராக களம் இறங்கி,

படுதோல்வி அடைந்தார். இந்த நேரத்தில், சொந்தமாகத் தொழில் தொடங்கி, அதில் பெரும்

கடனாளியாக மாறியிருந்தார்.

சோர்ந்து போயிருந்த லிங்கனை ஒரு போராளியாக மாற்றியது, அவரது

வளர்ப்புத் தாய் சாராபுஷ். ‘ஆட்சிப் பொறுப்புக்கு வரவேண்டும் என்றால், ஆசைப்படுவதைப்

பெறுவதற்கான தகுதிகளை முதலில் வளர்த்துக்கொள்’.

“நீ எதுவாக விரும்புகிறாயோ, அதுவாக மாறுவாய்!” என்றார் சாரா புஷ்.

பாதிரியார் சொன்ன அதே வார்த்தைகள்!இப்போது லிங்கனுக்குத் தன் இலக்குப் புரிந்தது.

மனதில் தெளிவு பிறந்தது.

அடிமை வியாபாரத்தை சட்டம் போட்டுத்தானே ஒழிக்க முடியும்? எனவே,

முழுமூச்சுடன் சட்டம் படிக்கத் தொடங்கினார் லிங்கன். மக்கள் மனதை

மாற்றினால் மட்டுமே சட்டத்தை சுலபமாக அமல்படுத்த முடியும் என்பதால்,

சட்டப்படிப்புடன் பேச்சுத் திறமையையும் வளர்த்துக் கொண்டார். அடிமை

ஒழிப்பைப் பற்றி ஊர் ஊராகக் கூட்டம் போட்டுப் பேசினார். ஒரு தலைவருக்கான

தகுதிகளை வளர்த்துக் கொண்டு, 1834ல் நடந்த நகராட்சி உறுப்பினர் தேர்தலில்

போட்டியிட்டு வெற்றியும் பெற்றார். அதன்பின் நகராட்சித் தலைவர்,

மாமன்ற உறுப்பினர், செனட் உறுப்பினர், உபஜனாதிபதி, எனப் பல்வேறு

பதவிகளுக்குப் போட்டியிட்டு சில வெற்றிகளையும், பல தோல்விகளையும்

சந்தித்து 1860ம் வருடம் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில்

நின்று வெற்றி பெற்றார். ஆம், எதுவாக மாற நினைத்தாரோ, அதுவாகவே

ஆனார் லிங்கன்!.

இல்வாழ்விலும் அவருக்குத் தோல்விகள்தான்! 1835ல் அவரின் காதலி ‘ஆனி’

விஷக் காய்ச்சலால் மரணம் அடைந்தார். 33வது வயதில் மேரியுடன்

திருமணம் முடிந்து நான்கு குழந்தை

கள் பிறந்தன. மூன்று குழந்தைகள் சிறுவயதிலேயே மரணமடைந்தார்கள்.

மனைவிக்கு மனநோய் இருந்தது. இத்தனைத் தோல்விகளையும் மன

உறுதியோடு எதிர்கொண்டதால்

தான், லிங்கன் வெற்றி பெற முடிந்தது.

அமெரிக்க ஜனாதிபதி ஆனதும், அதிரடி நடவடிக்கை எடுத்து அடிமை

அவலத்தை ஒழித்து, மாகாணங்களை ஒன்று சேர்த்து, அமெரிக்காவைத்

தலை நிமிரவைத்தார் லிங்கன். அந்தச் சாதனையால்தான், அடுத்த முறையும்

அவரே மீண்டும் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1865ல் நாடகம்

பார்த்துக் கொண்டு இருந்தபோது ஒரு நிறவெறியனால்

சுடப்பட்டு மரணம் அடைந்தார் லிங்கன்.

மணவாழ்க்கை பற்றி லிங்கன் கூறியது - மணவாழ்க்கை லிங்கனுக்கு

அவ்வளவு உவப்பாக இல்லை. பிற்காலத்தில் தம் இல்லற வாழ்க்கை

பற்றி குறிப்பிடும் போது “மண வாழ்க்கை மலர்ப் படுக்கை அல்ல

; போர்க்களம்” என்று குறிப்பிட்டார்.

“நீ எதுவாக மாற விரும்புகிறாயோ அதுவாக மாறுவாய்” என்பது ஆபிரஹாம்

லிங்கனுக்கு மட்டுமல்ல…
நம்பிக்கையைத் தளரவிடாமல், லட்சியத்துக்காக விடாப்பிடியாக போராடும்

நம்மைப்போன்ற ஒவ்வொருவருக்கும் அது வெற்றி திருமந்திரம்.

தேனி (Theni)

தலைநகரம் :தேனி நகரம்
பரப்பு :2,889 ச.கி.மீ
மக்கள் தொகை :1,094,724
எழுத்தறிவு :702,595 (72.01%)
ஆண்கள் :553,118
பெண்கள் :541,606
மக்கள் நெருக்கம் :1 ச.கீ.மீ - க்கு 351



வரலாறு:

1996-இல் தேனி மாவட்டம் உருவாக்கப்பட்டது. இதற்கு முன்பு இது மதுரை மாவட்டத் துடன் பலகாலம் இணைந்திருந்ததால், மதுரை மாவட்டத்தின் வரலாறு தேனி மாவட்டத் திற்கும் பொருந்தும் (காண்க : மதுரை மாவட்டம்)

எல்லைகள் : 

வடக்கில் திண்டுக்கல் மாவட்டத்தையும், கிழக்கில் மதுரை மாவட்டத்தையும், தெற்கில் கேரள மாநிலம் மற்றும் விருதுநகர் மாவட்டத்தையும், மேற்கில் கேரள மாநிலத்தையும்
தேனிமாவட்டம் எல்லைகளாக கொண்டுள்ளது. 

ஒன்றியங்கள் : 

உசிலம்பட்டி, செல்லம்பட்டி, பெரியகுளம், ஆண்டிப்பட்டி, தேனி, போடி நாயக்கனுர், சின்னமனுர், உத்தமப்பாளையம், கம்பம், கடமலைக் குண்டு, மயிலாடும்பாறை.

நகரங்கள் :

கம்பம், சின்னமனுர், பெரியகுளம், தேனி, போடிநாயக்கனுர்.

சுற்றுலாதலங்கள் :

இம்மாவட்டத்தில் வைகை அணையும், சுருளி நீர்வீழ்ச்சியும் சுற்றுலாத் தலங்களாகும்.

வைகை அணை :

மதுரையிலிருந்து 69 கி.மீ. தொலைவில், பெரியகுளம் வட்டத்தில் ஆண்டிப்பட்டிக்கு வடக்கே 6கி.மீ. தொலைவில் வைகை அணை கட்டப்பட்டுள்ளது. வைகை அணையின் நீர்பிடிப்பு பகுதி 9.4 சதுரை மைல்கள். இந்த அணை கி.பி 1955 இல் கமராசரால் அடிக்கல் நாட்டப்பட்டு 1958இல் கட்டி முடிக்கப்பெற்றது. அணையின் நீளம் 11,675 அடி. உயரம் 106அடி. நீர்த்தேக்கத்தின் கொள்ளளவு 68,000 கனஅடி. நீர் கிடைக்கும் பகுதியின் பரப்பு 870 சதுர மைல். வைகை அணையைக் கட்டிமுடிக்க 3.3 கோடி ரூபாய் செலவானது. வைகை அணையை அடுத்து ஓர் அழகிய பூங்கா இரண்டரை இலட்ச ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ளது. நீர் வளமிக்க காலத்தில் இங்கு செயல்படும் கண்ணைக் கவரும் ஒளி அமைப்புகள் நெஞ்சை அள்ளும் அழகுச் சூழலை உருவாக்கு கின்றன. இதனால் வைகை அணை சிறந்த சுற்றுலா மையமாகவும் விளங்கி வருகிறது. 

சுருளி நீர்வீழ்ச்சி :

தேக்கடி செல்லும் சாலையில், கம்பத்திலிருந்து 10கி.மீ. தொலைவில் சுருளி நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. சுருளி நீர்வீழ்ச்சியில் 50 அடி கீழேயும் 20 அடியிலும் இரண்டும் தட்டுகளாய் நீர் கொட்டுகிறது. சிறிதும் வற்றாது ஆண்டு முழுவதும் நீர் விழுகிறது. இந்த நீர்வீழ்ச்சியும், அங்கு கட்டப்பட்டுள்ள அணையும் கண்களுக்கு விருந்தளிப்பதாய் கவினுற அமைந்துள்ளன. குளிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. இது ஒரு சுற்றுலாத் தலமாகும். 

முக்கிய ஊர்கள் :

உசிலம்பட்டி :

மதுரையிலிருந்து 37 கி.மீ. தொலைவில் போடிநாயக்கனுர் இரயில் பாதையில் உள்ளது. முக்குலத்தோர் செல்வாக்கு மிகுந்த இச்சிறு நகரம் சிறந்த வணிகத் தலமாகும். கோட்ட ஆட்சித் தலைவர் அலுவலகமும், ஒரு கல்லூரியும் அமைந்துள்ளன. சிறு தொழில்கள்
பெருகியுள்ளன. 

எழுமலை :

ஆண்டிப்பட்டி மலையடிவாரத்தில், திருமங்கலத்துக்கு வடக்கே 32 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. திங்கள் கிழமைகளில் சந்தை கூடுகிறது. 

சாப்டூர் :

1895 இல் இவ்வூர் திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து மதுரை மாவட்டத்தில் சேர்க்கப் பட்டு, தற்போது தேனி மாவட்டத்தில் உள்ளது. இதன் அருகில் கேரள மாநில எல்லை ஆரம்பிக்கிறது. உல்லாசப் பயணிகளுக்கு உவப்பான இடம். வேளாண்மையிலும் சிறந்துள்ளது. சாப்டூர் என்பது தெலுங்குச் சொல். இதற்கு ஊற்றின் மீது விரிக்கப்பட்ட பாய் என்று பொருளாகும். 

பெரியகுளம் நகரம் :

வராக நதிக்கரையில் அமைந்த இவ்வூரை, வடகரை என்றும் தென்கரை என்றும் அழைக்கின்றனர். கொடைக்கானல் மலையின் அடிவாரத்திலிருந்து 18கி.மீ. தொலைவில் இவ்வூர் உள்ளது. இவ்வூரில் அரசினர் பழப்பண்ணை, கல்லூரி, உயர்நிலைப்பள்ளி, நகராண்மைக் கழகம், கோட்ட ஆட்சியர், வட்ட ஆட்சியர் அலுவலகங்கள் ஆகியன உள்ளன. 

தேனி நகரம் :

இந்நகராட்சிக்கு தேனி-அல்லி நகரம் எனப் பெயர் வழங்குகிறது. அல்லி நகரத்தின் ஒரு பகுதியே தேனி. கம்பம் பள்ளத்தாக்கில் அழகுற அமைந்துள்ளது. பொள்ளாச்சிக்கு அடுத்தப்படியாக தமிழ்நாட்டின் பெரிய சந்தை தேனிச் சந்தையாகும். குன்றுகளின் அடிவாரத்தில் இருப்பதால், ஆரோக்கியமான இயற்கைச் சூழல் இங்கு நிலவுகிறது. மதுரை - போடிநாயக்கனுர் இரயில் பாதையில் மிகப்பெரிய நகர் தேனி. இங்கிருந்து வைகை அணை. மஞ்சளாறு அணை. பெரியாறு நீர் மின் நிலையம். இங்கிருந்து வைகை அணை, மஞ்சளாறு அணை, பெரியாறு நீர் மின் நிலையம், சுருளி நீர்வீழ்ச்சி, கும்பங்கரை அருவி, கொடைக்கானல், குரங்கணி, சபரிமலை முதலிய சுற்றுலாத் தலங்களுக்கு அடிக்கடி பேருந்துகள் செல்கின்றன. 

இந்நகரத்தில ஞாயிற்றுக் கிழமைகளில் பொதுச் சந்தையும், வியாழக்கிழமைகளில் ஊர்ச் சந்தையும் கூடுகின்றன. நுற்பு நெசவாலைகள், பருத்தி, நெல் அரவை ஆலைகள், எண்ணெய் ஆட்டும் ஆலைகள், கடலை உடைக்கும் ஆலைகள், சிமெண்டு தூண்கள் செய்யும் தொழிலகம், வங்கிகள், தரகு மண்டிகள், சுங்கத்துறை அலுவலகம் ஆகியன இந்நகரில் அமைந்துள்ளன. 

ஆண்டிப்பாடி :

பெரியகுளத்திலிருந்து 16கி.மீ. தொலைவிலும், மதுரை-போடிநாயக்கனுர் இரயில் பாதையிலும் அமைந்துள்ளது. பாண்டியர்களால் கட்டப்பட்ட மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் இங்குள்ளது. தமிழ்புத்தாண்டு இங்கு பெரியத் திருவிழாவாக கொண்டாடப் படுகிறது. நல்ல மருது மர ஊற்றுகளில் சிறந்த நீர் சுரக்கிறது. 

வேலப்பர் கோவில் :

இச்சிற்றுர் ஆண்டிப்பட்டிக்குத் தெற்கே சுமார் 10 கல் தொலைவில் உள்ளது. இவ்வூர் மலைச் சரிவில் முருகன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் பூசாரியாக மலைவாழ் சாதியினரான பளிஞர் ஒருவர் பணிபுரிகிறார்.

வருஷநாடு :

ஆண்டிப்பட்டி மலைத் தொடருக்கும் மேக மலைத் தொடருக்கும் இடையே அதற்கு வடக்காக உள்ள பள்ளத்தாக்குப் பகுதியே வருஷநாடு எனப்படுகிறது. பள்ளத்தாக்கின் உயர்ந்த பகுதி கோட்டைமலை. இம்மலையின் உயரம் 6,617 அடி. மூங்கிலாறு, சிற்றாறு, வைகை முதலியன இப்பள்ளத்தாக்கில் ஓடி வருகின்றன. வருஷநாடு என்றால் மழை மிகுந்த பகுதி என்று பொருள். இங்கு கந்தகம், மண்ணெண்ணெய் முதலியன கிடைக்க வாய்ப்பு இருப்பதாகக் கருதப்படுகிறது. 

வீரபாண்டி :

முல்லையாற்றில் கரையில், தேனியிலிருந்து 6கி.மீ. தொலைவில் உள்ளது. கண்ணீசுரர் கோவிலும், மாரியம்மன் கோவிலும் ஊருக்கு பெருமை சேர்க்கின்றன.

போடிநாயக்கனுர் :

இந்நகரம் முப்புறமும் உயர்தோங்கிய மலைகளால் சூழப்பட்டுள்ளது. மதுரையிலிருந்து 90கி.மீ. தொலைவில் இவ்வூர் உள்ளது. 1916-இல் இங்கு நகராண்மைக் கழகம் ஏற்பட்டது. ஏலக்காய் விளைச்சலிலும், ஏலக்காய் வணிகத்திலும் இந்நகர் பெருமை பெற்றது. ஊத்தம்பாறை ஆறு, கூவலங்காறு, கொட்டக்குடி ஆறு, வலசை ஆறு, முத்துக்கோம்பையாறு என்றும் ஐந்து ஆறுகள் பாய்வதால் பஞ்சநதி என்றும் இவ்வூருக்குப் பெயர் வழங்குகிறது. தமிழ்நாட்டில் இலவம் பஞ்சு உற்பத்தியில் போடிநாயக்கனுர் முன்னணியில் உள்ளது. இவ்வூரில் ஏலக்காய் பயிரிடுவோர் சங்கம் சிறப்பாகச் செயல்படுகிறது. தேவிகுளம் மலையில் விளையும் பொருட்களை இறக்குமதி செய்யவும், தேவையானப் பொருட்களை ஏற்றுமதி செய்யவும் இச்சங்கம் உதவுகிறது. சென்னைத் துறைமுகத்திற்கு தேயிலைப் பெட்டிகளை அனுப்புவதற்காகவே மதுரை -போடிநாயக்கனுர் இரயில்பாதை அமைக்கப்பட்டது. அக்காள் மலை, தங்கை மலை, மரக்கலராயர் மலை இம்மூன்றும் பெளர்ணமி நாளில் கண்கொள்ளாக் காட்சியாகக் இருக்கும். 

கம்பம் :

இது நகராண்மைக் கழக ஆட்சியில் உள்ளது. வேளாண்மையே பெரிய தொழிலாக விளங்குகிறது. இவ்வூரருகே குண்டலக் கண்மாய் ஆற்றின் குறுக்கே அணை கட்டப் பட்டுள்ளது. மலையடிவாரத்தில் லோயர்கேம்ப் என்ற ஊரில் பெரியாறு ஏரித்தண்ணீரைக் கொண்டு மின் உற்பத்தி நிலையம் அமைத்திருக்கிறார்கள். தேக்கடிக்கு அருகே, மலையைக் குடைந்து சுரங்கப்பாதை வெட்டியிருக்கிறார்கள். பெரியாற்றின் நீர் மின்சார நிலையத்தில் புகுந்து அங்குள்ள மூன்று பெரிய மின்னுற்பத்தி இயந்திரங்களைச் சுழலச் செய்கிறது. பிறகு இந்த நீர் வைகை அணையில் போய் விழுகிறது. 

கம்பத்திலிருந்து குமிளி என்னுமிடம் 6கி.மீ. தொலைவில் உள்ளது. இந்த ஊருக்குச் செல்லும் மலை வழியில் இருபுறமும் இனிய இயற்கைக் காட்சிகளைக் கண்டு மகிழலாம். வண்ணத் துப்பட்டிகள் கம்பத்தில் தயாரிக்கப்ட்டு தமிழகத்தின் பல பகுதி களுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன. இவ்வூர்க் கோவில்களுள் கம்பராகவப் பெருமாள் கோயில் குறிப்பிடத்தக்கது. கம்பத்தில் முஸ்லீம்கள் குறிப்பிட்டத் தொகை யினராக உள்ளனர். ஆற்காடு நவாப் காலத்தில் கட்டப்பட்ட வாவேர் பள்ளிவாசலும், இராஜபாளையத்தார் கட்டிய மஸ்ஜிதுல் இலாஹி பள்ளிவாசலும் இங்குள்ளன. இங்கு அரபு பள்ளி ஒன்றும் நடைபெறுகிறது. 

சின்னமனுர் :

இவ்வூர் மூன்றாம் நிலை நகராண்மைக் கழகமாக விளங்குகிறது. பெரிய குளத்திலிருந்து 35கி.மீ. தொலைவில் பெரியாற்றின் கரையில் அமைந்துள்ளது. இங்கு பேருந்துப் போக்குவரத்து மிகுதி. அருகிலுள்ள இரயில் நிலையம் தேனி. சின்னமனுரில் நெல்வயல் கள், தென்னந்தோப்புகள் செழித்துள்ளன. எண்ணெய் ஆலைகள் பல உள்ளன. தேயிலை முதலிய தோட்டப் பொருள்கள் மிகுதியாக வெளியூர்களுக்கு அனுப்பப் படுகின்றன. முதல் பராந்தகச் சோழனால் கட்டப்பட்ட கன்னிகா பரமேசுவரி கோவில் உள்ளது. 9,10 ஆம் நூற்றாண்டுகளில் கட்டப்பட்ட பூலா நந்தீசுவரர் கோவிலும் இருக்கிறது. வரலாற்று அறிஞர்கள் பெருமிதத்துடன் குறிப்பிடும் சின்னமனுர் செப்பேடுகள் இந்நகரில் கிடைத்தவையே. இவற்றிலிருந்து அரிகேசன் முதல் இரண்டாம் நரசிம்மன் வரை ஆட்சி செய்த பாண்டிய மன்னர்களைப் பற்றி அறிய முடிந்தது. 

வைவேவீஸ் நகரியம் : 

1964 ஆம் ஆண்டு இந்நகரியம் அமைக்கப்பட்டது. உத்தமப்பாளையம் வட்டத்தில் 5100 அடி உயரமுள்ள மலைப்பகுதியில் அமைந்து இயற்கை வளமும், சுருளியாறு அணைக் கட்டுப் பகுதியும் உடையது. இதன் மொத்தப்பரப்பு 10,000 ஏக்கர். 1947ஆம் ஆண்டில் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்து தேயிலைத் தோட்டங்களை அபிவிருத்தி செய்தனர். தோட்டப் பணியாளர்களுக்காக 1400 வீடுகள் கட்டப்பட்டன. மிகப்பெரிய தேயிலைத் தொழிற்சாலைகள் இரண்டும், ஒரு பணிமனையும் உள்ளன. மொத்தம் இங்குள்ள ஆறு தோட்டங்களும் தி மதராஸ் டீ எஸ்டேட் (பி) லிட் என்னும் கம்பெனிக்குச் சொந்தமானது. இங்கு மாரிக்காலத்தில் மழைக்கும், பனிக்காலத்தில் பனிக்கும் குறைவில்லை. சுமார் 7000 மக்கள் இங்கு வசிக்கின்றனர். மருத்துவமனை, பால்பண்ணை, கால்நடை மருந்தகம், தங்கும் விடுதி, சினிமா தியேட்டர் முதலியனவும் உள்ளன. 

உத்தமப்பாளையம் :

இது கம்பம் பள்ளத்தாக்கில் உள்ளது. மக்கள் தொகையில் சரிபாதி முஸ்லீம்கள். முல்லை யாற்றின் பெருவளத்தால் எங்கும் பசுமை நிறைந்து காணப்படுகிறது. சற்றுத் தொலை வில் சுருளி அருவி உள்ளது. மதுரைச் சீமையில் ஏற்பட்ட முதல் பாளையமாகையால் இந்த ஊரினர் இதைப் பாளையம் என்றே சுருக்கி அழைப்பர். சர்.பி.டி. ராசன், கருத்த மீரா ராவுத்தர், ஹாஜி முகமது மீரான், வள்ளல் மக்கா ராவுத்தர், வள்ளல் மீர் முகமது ராவுத்தர் அனைவரும் இவ்வூரினரே. கருத்தராவுத்தர் நிறுவிய கல்லூரி ஒன்று இங் குள்ளது. 

தேவாரம் :

உத்தமபாளையத்துக்கு வடமேற்கே 11கி.மீ. தொலைவில் உள்ளது. ஏலக்காய் இங்கு நிறைய விளைகிறது. ஆனி தொடங்கி தீபாவளி வரை நல்ல சாரல் உள்ளதால், இங்கு
வாழ்வது இனியதாய் இருக்கிறது. 

கோம்பை :

உத்தமப்பாளையத்திற்கு வடமேற்கே 6கி.மீ. தொலைவில், மலையடி வாரத்தில் இயற்கை எழில் சூழ இவ்வூர் விளங்குகிறது. நன்செய், புன்செய் பயிர்கள் தவிர ஏலக்காய் வேளாண்மையும் மிகுதி. மலையடி வாரத்தில் அரங்கநாதர் கோவிலும், ஊருக்குள் திருமலைராயப் பெருமான் கோவிலும் உள்ளன. வைகாசி விசாகத் திருவிழா பெரிய விழாவாக நடைபெறுகிறது. இப்பகுதியில் கோம்பை நாய் என்னும் ஒரு வகை நாய் இனம் புகழ் பெற்று விளங்கியது. 

கூடலூர் :

இது ஒரு பேரூராட்சி. பெரியாற்றிலிருந்து கூடலூருக்குக் குடிநீர் வழங்கப்படுகிறது. காப்பிலிக் கவுண்டர், குறும்பக் கவுண்டர், மூணுவளைவிக் கவூண்டர், அலுப்பக் கவுண்டர் எனப்படும் கவுண்டர்கள் வாழுகின்றனர். கேப்பை, சாமை, காணம் வேளாண்மை நடைபெறுகிறது. இது திண்டுக்கல் சீமையிலும், திருவாங்கூர் சமஸ்தான ஆட்சியிலும் இருந்துள்ளது. கூடலழகள் என்ற இறைவனின் திருப்பெயரே கூடலூரானது.

சுருளிப்பட்டி :

கம்பத்திலிருந்து 10கி.மீ. தொலைவிலுள்ள இப்பகுதிக் காடுகளில் தேக்குமரம் நிறைய விளைகிறது. சுருளிமலையில் சுப்ரமணிய சுவாமி கோவிலும் நீர்வீழ்ச்சியும் உள்ளன. சுருளிமலை ஊமைத்துரைக்கு அடைக்கலம் தந்த மலையாகும். 

காமயக்கவுண்டன்பட்டி :

கம்பத்திலிருந்து 4கி.மீ. தொலைவிலும், சுருளிமலையிலிருந்து 10கி.மீ. தொலைவிலும் உள்ளது. பெரியாற்றுப் பாசனத்தால் இவ்வூர் வளம் பெறுகிறது. தமிழ்நாட்டில் திராட்சைப்பழச் சாகுபடிக்குப் பெயர் பெற்றது. இந்த ஊர் நிலத்து மண் செக்கச் சிவந்து இருக்கும். கடலை இம்மண்ணில் செழிப்பாக விளைகிறது. புளியும், தென்னையும், மாவும், பாலாவும் இங்கு செழித்து வளர்கின்றன. காமயக்கவுண்டன்பட்டி, மதுரை மாநகரின் அமைப்பைக் கொண்டுத் திகழ்கிறது. தேரோடும் அகன்றத் தெருக்கள் உள்ளன. அருகிலுள்ள வண்ணாத்திப்பாறை என்னும் ஊரில் சந்தன மரங்கள் மிகுதி.

அரிஸ்டாட்டில் (கி.மு.384 - கி.மு.322)


Aristotleபண்டைய உலகில் தலைசிறந்த தத்துவஞானியாகவும், விஞ்ஞானியாகவும் திகழ்ந்தவர் அரிஸ்டாட்டில். இவர் முறையான தருக்கவியல் ஆராய்ச்சியைத் தோற்றுவித்தார். தத்துவத்தின் அனைத்துத் துறைகளையும் வளப்படுத்தினார்; அறிவியலுக்கு அளவிறந்த அருந்தொண்டுகள் புரிந்தார்.
அரிஸ்டாட்டிலின் கொள்கையில் பல இன்று காலங்கடந்தனவாகி விட்டன. எனினும், இவருடைய தனிக் கோட்பாடுகளை விடப் பெருமளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக விளங்குவது இவருடைய பகுத்தறிவு அணுகு முறையாகும். மனித வாழ்க்கையின் மற்றும் சமுதாயத்தின் ஒவ்வொரு அம்சமும், சிந்தனைக்கும், பகுப்பாய்வுக்கும் உரிய நுதல் பொருளாக அமையும் என்ற கோட்பாடு இந்த அண்டம், முறையற்ற தற்செயல் நிகழ்வுகளினாலோ மந்திர தந்திரத்தினாலோ, மனம் போல நடக்கிற தெய்வங்களின் விருப்பு வெறுப்புகளினாலோ கட்டுப்படுத்தப் படவில்லை. மாறாக, பகுத்தறிவு சார்ந்த விதிகளுக்கு உட்பட்டு அண்டம் இயங்குகிறது என்னும் கொள்கை; இயற்கை உலகின் ஒவ்வொரு அம்சம் குறித்தும் மனிதர்களை முறையான ஆராய்ச்சிகள் செய்வது பயனுடையதாக இருக்கும் என்ற நம்பிக்கை; நமது முடிவுகளைச் செய்வதில் அனுபவ நோக்கறிவினையும், தருக்க முறைப் பகுத்தறிவினையும் பயன்படுத்த வேண்டும் என்பதில் ஆழ்ந்த பற்றுறுதி; இவை அனைத்தும் அரிஸ்டாட்டிலின் எழுத்துகளில் அழுத்தமாக இழையோடக் காணலாம்.
அரிஸ்டாட்டில், மாசிடோனியாவிலிருந்து ஸ்டாகிரா என்ற நகரில் கி.மு. 384 இல் பிறந்தார். அரிஸ்டாட்டில் தம்முடைய 17 ஆம் வயதில் ஏதென்ஸ் நகருக்குச் சென்று, பிளேட்டோவின் மாணவரானார். அங்கு அவர் பிளாட்டோ இறந்த சில ஆண்டுகளுக்குப் பின்பு வரை 22 ஆண்டுகள் இருந்தார். இவருடைய தந்தை, புகழ் பெற்ற அலெக்சாந்தரின் தந்தையான பிலிப்பின் அரண்மனையில் வைத்தியராக இருந்தவர். எனவே, இவருடைய தந்தையை அடியொற்றி ஆர்வம் தோன்றியிருக்கலாம். பிளேட்டோவிடம் பயின்ற காரணத்தால் தத்துவமுறை அனுமானங்களிலும் ஆர்வத்தை வளர்த்துக் கொண்டார்.
அரிஸ்டாட்டில் கி.மு. 342 இல் மாசிடோனியா திரும்பினார். பிலிப் மன்னரின் வேண்டுகோளுக்கிணங்க அம்மன்னனின் 13 வயது மகனுக்கு ஆசிரியரானார். இந்த இளவரசன் தான் பிற்காலத்தில் உலக வரலாற்று மகா அலெக்சாந்தர் எனப் புகழ் பெற்றவர் ஆவார். இளம் அலெக்சாந்தருக்கு அரிஸ்டாட்டில் பல ஆண்டுகள் கல்வி கற்பித்தார். கி.மு. 335 இல் அலெக்சாந்தர் அரியணை ஏறினார். அரிஸ்டாட்டில் ஏதென்சுக்குத் திரும்பி, அங்கு சொந்தமாக ஒரு பள்ளியை நிறுவினார். லைசியம் என்பது இந்தப் பள்ளியின் பெயர். தம் மாணவர்க்கு மெய் விளக்கியல் கொள்கைகளைக் கற்பிப்பதற்காக ஏதென்ஸ் நகரத்திலிருந்த ஒரு தோட்டத்தில் இதை அவர் நிறுவினார். இதற்கு உலாப் பள்ளி என்ற பெயரும் உண்டு. அரிஸ்டாட்டில் இங்கு உலாவிக் கொண்டே பாடம் சொல்வது வழக்கமாக இருந்ததால் இப்பெயர் ஏற்பட்டது என்பர். இங்கு 12 ஆண்டுகள் இவர் கழித்தார். இந்தக் கால அளவின்போது தான் அலெக்சாந்தர் தம் ஆட்சிப் பரப்பினை விரிவுப் படுத்துவதற்காக நாடுகளைக் கைப்பற்றும் படையெடுப்புகளை மேற்கொண்டிருந்தார். அலெக்சாந்தர் தம்முடைய முன்னாள் ஆசிரியரிடம் அரசியல் தொடர்பான ஆலோசனைகளைக் கேட்கவில்லை. எனினும், அவரது ஆராய்ச்சிகளுக்குத் தேவைப்பட்ட நிதி உதவிகள் அனைத்தையும் தாராளமாக வழங்கி வந்தார். ஒரு விஞ்ஞானி தம் ஆராய்ச்சிக்காக அரசிடமிருந்து பெருமளவில் நிதியுதவி பெற்றது உலக வரலாற்றில் இதுவே முதல் நிகழ்ச்சி எனலாம். இதன் பின்பு பல நூற்றாண்டுகள் வரை எந்த விஞ்ஞானிக்கும் அரசு நிதியுதவி கிடைத்ததில்லை.
அலெக்சாந்தருடன் அரிஸ்டாட்டில் கொண்டிருந்த தொடர்பு சில ஆபத்துகளையும் தோற்றுவித்தன. அலெக்சாந்தரின் சர்வாதிகார முறை ஆட்சியை அரிஸ்டாட்டில் கொள்கையளவில் எதிர்த்தார். அரசு துரோகக் குற்றம் செய்ததாக ஐயத்தின் பேரில் அரிஸ்டாட்டிலின் மருமகனை அலெக்சாந்தர் தூக்கிலிட்டபோது, அரிஸ்டாட்டிலையும் தூக்கிலிடுவதற்கு அவர் எண்ணியிருக்க வேண்டும். அரிஸ்டாட்டிலின் மக்களாட்சி ஆதரவுக் கொள்கையை அலெக்சாந்தர் விரும்பவில்லை. அதே சமயத்தில் அவர் அலெக்சாந்தருடன் நெருக்கமாகத் தொடர்பு கொண்டிருந்தமையால் ஏதென்ஸ் மக்கள் அவரை நம்பவில்லை. கி.மு. 323 இல் அலெக்சாந்தர் இறந்த பின்பு அரசியல் நிலைமை மாறியது. மாசிடோனியாவை எதிர்க்கும் குழுவினர் ஏதென்சில் ஆட்சிக்கு வந்தனர். ஆட்சியாளர்கள், சமயத்தை அவமதித்ததாக ஏதென்சில் 76 ஆண்டுகளுக்கு முன்பு சாக்ரட்டீசுக்கு நேர்ந்த கதியை நினைவு கூர்ந்த அரிஸ்டாட்டில், தத்துவத்திற்கு எதிரான இரண்டாவது பாவத்தைச் செய்ய ஏதென்சுக்கு நான் இடமளிக்கப் போவதில்லை. என்று கூறி அந்த நகரிலிருந்து தப்பி ஓடினார். வேற்று நாட்டிலேயே அவர் தம் 62 ஆம் வயதில் கி.மு. 322 இல் நோய்வாய்ப்பட்டு இறந்தார்.
அரிஸ்டாட்டில் எழுதிக்குவித்த நூல்களின் எண்ணிக்கை மலைப்பூட்டுவதாகும். அவர் 170 நூல்கள் இயற்றியதாக ஒரு பண்டையப் பட்டியல் கூறுகிறது. அவர் எழுதிய நூல்களின் எண்ணிக்கையைப் போலவே, அவர் புலமை பெற்றிருந்த பல்வேறு துறைகளின் எண்ணிக்கையுங்கூட நமக்கு வியப்பூட்டுகின்றன. அவருடைய நூல்கள், அவரது காலத்திய அறிவியல் செய்திகள் அடங்கிய கலைக்களஞ்சியமாகத் திகழ்கின்றன. வானியல், விலங்கியல், கருவியல், புவியியல், நில உட்கூறியல், இயற்பியல், உடல் உட்கூறியல், உடலியல் ஆகியவை குறித்தும், பண்டையக் கிரேக்கர்கள் அறிந்திருந்த அறிவுத் துறைகள் அனைத்தைப் பற்றியும் அரிஸ்டாட்டில் எழுதினார். அவருடைய அறிவியல் நூல்கள், ஒரு பகுதி அவருக்காக அமர்த்தப் பட்டவர்கள் சேகரித்துக் கொடுத்தத் தகவல்களைத் தொகுத்துக் கூறுகின்றன. மற்றொரு பகுதி, அவரே சொந்தமாக ஆராய்ச்சிகள் நடத்திக் கண்டறிந்த முடிவுகளைக் கூறுகின்றன.
அறிவியலின் ஒவ்வொரு துறையிலும் தலைசிறந்த வல்லுநராக விளங்குவது என்பது வியப்புக்குரிய சாதனையாகும். ஆனால், அரிஸ்டாட்டில் அத்தகைய வியத்தரு சாதனையை விடவும் அதிகமாகவே சாதனைகள் புரிந்துள்ளார். அவர் தற்சிந்தனை வாய்ந்த ஒரு தத்துவஞானியாகவும் விளங்கினார். ஊகமுறைத் தத்துவத்தின் (Speculative Philosophy) ஒவ்வொரு பிரிவுக்கும் அவர் அருந்தொண்டு ஆற்றியுள்ளார். அறவியல், மெய் விளக்கவியல், உளவியல், பொருளியல், இறைமையியல், அரசியல், சொல்லாட்சிக் கலை, அழகியல் ஆகிய துறைகள் பற்றி அவர் எழுதினார். கல்வி, கவிதை, காட்டுமிராண்டி மரபுகள், ஏதெனியர்கள் அரசமைப்பு ஆகியவை குறித்தும் அவர் எழுதிக் குவித்தார். பல்வேறு நாடுகளின் வெவ்வேறு வகை அரசமைப்புகளையும் அவர் திரட்டி வைத்திருந்தார். அவற்றை ஒப்பாராய்ச்சி திரட்டி வைத்திருந்தார். அவற்றை ஒப்பாராய்ச்சி செய்வதிலும் அவர் ஈடுபட்டிருந்தார்.
அவருடைய படைப்புகள் அனைத்திலுமே முக்கியமானது, தருக்கவியல் கோட்பாடு பற்றிய அவரது நூலே ஆகும். வேறெந்த துறையையும் விட இத்துறையில் தான் அரிஸ்டாட்டிலின் செல்வாக்கு பரந்து நிலை பெற்றது எனலாம். தத்துவத்தின் இந்த முக்கியமான பிரிவினை வகுத்தமைத்த பெருமை அரிஸ்டாட்டிலுக்கு உண்டு. உண்மையைக் கூறின், இவருடைய தருக்க முறைச் சிந்தனைப் போக்கு தான் இத்துணை துறைகளில் பெருந்தொண்டாற்றுவதற்குத் துணை புரிந்தது. சிந்தனையை ஒழுங்கமைத்துக் கொடுப்பதில் இவர் தனித் திறமையுடையவராக இருந்தார். இவர் கூறிய இலக்கணங்களும், இவர் பகுத்தமைத்த வகை பிரிவுகளும் பல்வேறு துறைகளில் பிற்காலச் சிந்தனைக்கு அடிப்படையாக அமைந்தன. இவர் ஒரு போதும் தீவிரவாதியாகவும் இருந்ததில்லை; நடைமுறைப் பொது அறிவின் குரலாகவே அவர் எப்போதும் விளங்கினார். அவர் தவறுகள் செய்திருக்கிறார். ஆயினும், அவருடைய விரிவான சிந்தனைக் கலைக் களஞ்சியத்தில் அவர் அறியாமையால் செய்துள்ள பிழைகள் மிகக்குறைவாக இருப்பது மிகுந்த வியப்பளிக்கிறது.
பிற்காலத்தில் மேலைநாட்டு சிந்தனைகள் அனைத்திலும் அரிஸ்டாட்டிலின் செல்வாக்கினைப் பேரளவுக்குக் காணலாம். பண்டைக் காலத்திலும், மத்தியக் காலத்திலும் அவரது நூல்கள் லத்தீன், சிரியாக், அராபிக், இத்தாலியன், ஃபிரெஞ்ச், ஹீப்ரு, ஜெர்மன், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பெயர்க்கப்பட்டன. பிற்காலக் கிரேக்க எழுத்தாளர்களும், பைசாண்டியத் தத்துவஞானிகளும், இஸ்லாமியத் தத்துவத்திலும் அவருடைய செல்வாக்கு மிகுதியாகக் காணப்படுகிறது. பல நூற்றாண்டுகள் வரை ஐரோப்பியச் சிந்தனைகளில் அவருடைய எழுத்துகளே ஆதிக்கம் பெற்றிருந்தன. அராபியத் தத்துவஞானிகளில் தலைசிறந்தவர் எனப் புகழ்பெற்ற ஆவரோஸ், இஸ்லாமிய இறைமையியலுக்கும் அரிஸ்டாட்டிலின் பகுத்தறிவு வாதத்திற்குமிடையே ஒருவகை ஒருங்கிணைப்பை ஏற்படுத்த முயன்றார். மத்தியக் காலத்தில் மிகுந்த செல்வாக்கு வாய்ந்த யூத சிந்தனையாளராக விளங்கிய மைமோனிடஸ் அதே போன்று யூதர்களின் சமயக் கோட்பாடுகளுடன் அரிஸ்டாட்டிலின் பகுத்தறிவுக் கோட்பாட்டை வெற்றிகரமாக ஒருங்கிணைத்தார். புனித தாமஸ் அக்குவினாஸ் என்ற கிறிஸ்துவ அறிஞர் அரிஸ்டாட்டில் பற்றி இறைமையியல் சுருக்கம் என்னும் புகழ் பெற்ற நூலை எழுதினார். அரிஸ்டாட்டிலின் செல்வாக்குக்கு ஆட்பட்ட மத்திய கால அறிஞர்கள் மிகப் பலர், அவர்கள் அனைவரையும் கூறுவது இயலாத காரியம்.
அரிஸ்டாட்டிலை வியந்து பாராட்டுவது நாளுக்கு நாள் பெருகி மத்தியக் காலத்தின் இறுதியில் அவரைத் தெய்வமாகவே போற்றும் அளவுக்கு ஆர்வம் வளர்ந்தது. இவருடைய நூல்களே மேற்கொண்டு ஆராய்ச்சிகள் நடத்துவதற்கு வழிகாட்டும் விளக்காகக் கருதாமல், அவரது நூல்களைக் கற்றாலே போதும், வேறு ஆராய்ச்சிகள் தேவையில்லை என்று கண்மூடித்தனமாகக் கருதும் அளவுக்கு அவருடைய நூல்களின் மீது அறிஞர்கள் பக்தி கொண்டனர். ஒவ்வொரு மனிதனும் தானே கூர்ந்து நோக்க வேண்டும்; தானே சிந்திக்க வேண்டும். என்று தமது எழுத்துகளில் எல்லாம் வலியுறுத்தியவர் அரிஸ்டாட்டில். அவர் தம் நூல்களின் மீது இத்தகைய கண்மூடித்தனமாக பக்தியைப் பிந்திய தலைமுறையினர் கொள்வதை விரும்பியிருக்க மாட்டார் என்பதில் ஐயமில்லை.
இன்றைய அளவுகோலின் படி நோக்கும் போது அரிஸ்டாட்டிலின் சில கொள்கைகள் மிகவும் பிற்போக்கானவையாக இருக்கின்றன. எடுத்துக்காட்டாக, அடிமை முறையை அவர் ஆதரித்தார். அடிமை முறை இயற்கை விதிக்கு உட்பட்டது என்றார். பெண்கள் இயற்கையாகவே ஆண்களை விட தாழ்ந்தவர்கள் என்று அவர் நம்பினார். (இவ்விரு கொள்கைகளும் அவர் காலத்தில் ஆழமாக வேரூன்றி இருந்தவையாகும்.) எனினும், அரிஸ்டாட்டிலின் வேறு பல கொள்கைகள் இன்றையச் சிந்தனைகளை விடவும் மிகவும் புரட்சிகரமானவையாக உள்ளன. உதாரணமாக, புரட்சியையும் குற்றத்தையும் பிறப்பிக்கும் தாய் வறுமை, பேரரசுகளின் தலைவிதி இளைஞர்கள் கல்வியறிவு பெறுவதைப் பொறுத்திருக்கிறது. என்னும் கருத்துகளை கூறலாம். (அரிஸ்டாட்டில் வாழ்ந்த காலத்தில் பொதுக் கல்வி முறை எதுவும் செயற் படுத்தப்படவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.)
கடந்த சில நூற்றாண்டுகளாக அரிஸ்டாட்டிலின் செல்வாக்கும் புகழும் கணிசமாகக் குறைந்துவிட்டன. ஆயினும், அவருடைய செல்வாக்கு மிகப் பரந்து பட்டதாகவும், நெடுங்காலம் நீடித்ததாக இருந்தமையால், இந்தப் பட்டியலில் இடம் பெறுவதற்கு முற்றிலும் தகுதியுடையவரேயாவார். இப்பட்டியலில் அவர் பெற்றுள்ள படிநிலையை அவர் பெற்றிருப்பதற்குக் காரணம், அவருக்கு முந்தி இடம் பெற்றுள்ள பதின்மூன்று பேரும் அவரை விட முக்கியத்துவம் வாய்ந்தவர்களாக விளங்கினார்கள் என்பது ஒன்றேயாகும்.