Pages

Thursday 5 September 2013

நெல்லையில் வஉசி பிறந்தநாளை முன்னிட்டு மரியாதை





வஉசி பிறந்த நாளை முன்னிட்டு நெல்லை டவுண் பொருட்காட்சி திடல் மணி மண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு அரசியல் கட்சிபிரமுகர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

வஉசி மணி மண்டபத்தில் கப்பலோட்டிய தமிழன் வஉசிதம்பரனாரின் 142வது பிறந்த நாள் விழா  அரசு சார்பில் கொண்டாடப்பட்டது. மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், நெல்லை கோட்டாட்சியர் பெருமாள் சிதம்பரனார் முழு திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து  மரியாதை செலுத்தினார்கள். 

மேலும், மேயர் விஜிலா சத்தியானந்த், நெல்லை சட்டமன்ற உறுப்பினர் நயினார்  நாகேந்திரன், மண்டலத் தலைவர்கள் மோகன்,எம்.சி.ராஜன்,ஹைதர் அலி, மாமன்ற உறுப்பினர்கள் பரணி ஆ.சங்கரலிங்கம், வண்ணை கணேசன், செய்தி  மக்கள் தொடர்பு அலுவலர் மாரியப்பன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர்கள் (செய்தி) ஆறுமுக செல்வி (விளம்பரம்) கயிலைசெல்வம், வட்டாட்சியர்  பாலசுப்பிரமணியன் உள்பட அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.  

வஉசியின் வம்சாவளியினரை தொடர்ந்து காங்கிரஸ், மதிமுக, தேமுதிக, பாரதிய ஜனதா கட்சி,  இந்திய ஜனநாயக கட்சி உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் வஉசி சிலைக்கு மாலை அணிவித்தனர்.

No comments:

Post a Comment